இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!
இங்கிலாந்து - இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி குறித்து...
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் நாங்கள் பந்துவீசவே விரும்புவதாகக் கூறினார். அணியில் மூத்த வீரர்களும் 2 சுழல்பந்துவீச்சாளர்களுடன் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் விளையாடுவதாக ஷுப்மன் கில் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 4-0 என இழந்து படுதோல்வி அடைந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி பிர்மிங்ஹமில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
Advertisement
Advertisement
இங்கிலாந்து: ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (கீப்பர்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங்கு, ஆதில் ரஷித்.
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்ஷர் படேல், குர்னூர் ப்ரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
England have won the toss and have opted to bat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.