FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

கேப்டன் தோனி நிகழ்த்திய சாதனைகள்

டி20 கிரிக்கெட்டில் 300 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்கிற சாதனையை தோனி படைத்துள்ளார்.

Updated On : 16 அக்டோபர் 2021, 11:52 am IST
பகிர்:

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் தோனி. 

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்று ஆட்டம், தோனி விளையாடிய 300-வது டி20 ஆட்டம். 

Advertisement

Advertisement

டி20 கிரிக்கெட்டில் 300 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்கிற சாதனையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளின் சமி, 200-க்கும் அதிகமான டி20 ஆட்டங்களில் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய அணிக்காக 72 டி20 ஆட்டங்களில் கேப்டனாக விளையாடிய தோனி 14 ஆட்டங்களில் வென்று 28-ல் தோல்வியடைந்துள்ளார்.

சிஎஸ்கே அணி கேப்டனாக 214 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கி 131 வெற்றிகளை அடைந்துள்ளார். 81 ஆட்டங்களில் தோல்வி.

சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில் 14 ஆட்டங்களில் புணே அணியின் கேப்டனாகப் பணியாற்றி 5-ல் வெற்றியும் 9-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

மேலும் 2010, 2011, 2018, 2021 என நான்கு ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் வென்றுள்ளது சிஎஸ்கே அணி. மூன்று தசாப்தங்களில் கோப்பையை வென்ற ஒரே அணி என்கிற பெருமையும் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளது. ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா 5 முறையும் தோனி 4 முறையும் வென்றுள்ளார்கள். 

அதிக வயதில் (40 வருடங்கள், 100 நாள்கள்) ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் - தோனி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments