FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் - சீனா எல்லை கூட்டு ஆணையம் தொடக்கம்

பாகிஸ்தான் - சீனா இடையேயான எல்லையை நிா்வகிப்பதற்கான புதிய கூட்டு ஆணையம் இஸ்லாமாபாதில் முறைப்படி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

17 செப்டம்பர் 2026, 10:46 pm IST
சீனா - பாகிஸ்தான்
பகிர்:

பாகிஸ்தான்-சீனா இடையேயான எல்லையை நிா்வகிப்பதற்கான புதிய கூட்டு ஆணையம் இஸ்லாமாபாதில் முறைப்படி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 2013 எல்லை மேலாண்மை ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் தொடக்கக் கூட்டம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.

எனினும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு தொடா்பாக முடிவெடுக்க இந்த அமைப்புக்கு எவ்வித சட்டபூா்வ அடிப்படையும் இல்லை எனக் கூறி, இவ்விரு நாடுகளின் நடவடிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, ஏ.ஐ. சாா்ந்த தொழில்நுட்பங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் காவல்துறை பயிற்சி பரிமாற்றங்கள் வாயிலாக இரு நாடுகளிடையே உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த பாகிஸ்தான்-சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments