FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

அறிவுரை கூறிய ரிக்கி பாண்டிங்; அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்!

ரிக்கி பாண்டிங்கின் அறிவுரை அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியதாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 ஏப்ரல் 2024, 3:37 pm IST
- படம் | ஐபிஎல்
பகிர்:

ரிக்கி பாண்டிங்கின் அறிவுரை அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியதாக தில்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தில்லி அணியின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக அரைசதம் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், ரிக்கி பாண்டிங்கின் அறிவுரை அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியதாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் - படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால், நான் களமிறங்குவதற்கு முன்பு ரிக்கி பாண்டிங் என்னிடம் பேசினார். பந்தினை கடினமாக அடிக்க முயற்சி செய்யாமல் டைமிங் செய்து விளையாட அறிவுரை கூறினார். அவரது அந்த அறிவுரை அதிரடியாக ஆட வேண்டும் என்ற எனது எண்ணத்தை குறைத்து, பந்தை சரியாகப் பார்த்து நடுபேட்டில் படும்படியாக விளையாட வேண்டும் என்பதை உணர்த்தியது. அவர் கூறிய அறிவுரையின்படி விளையாடியது சிறப்பான இன்னிங்ஸாக அமைந்தது என்றார்.

நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 35 பந்துகளில் 55 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments