ஐபிஎல்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

கொல்கத்தா அணி 12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையிடம் வெற்றிப் பெற்றுள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களே சோ்த்த கொல்கத்தா, பின்னா் மும்பையை 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு சுருட்டியது. 2012-க்குப் பிறகு மும்பை மண்ணில் இதுவே கொல்கத்தாவின் முதல் வெற்றியாகும்.

கேகேஆர் அணியின் உரிமையாளர் பிரபல நடிகர் ஷாருக்கான். அவரது மகள் சுஹானா கான் இந்த வெற்றிக் குறித்து இன்ஸ்டாகிராமில், “இறுதியாக வென்றுவிட்டோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சிஸ் எனும் இணையத் தொடரில் சுஹானா கானின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் வரலாற்று வெற்றி இது. அபாரமான வெற்றி. அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT