முகப்பு
ஐபிஎல்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

கொல்கத்தா அணி 12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையிடம் வெற்றிப் பெற்றுள்ளது.

Updated On : 4 மே 2024, 12:09 pm IST
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களே சோ்த்த கொல்கத்தா, பின்னா் மும்பையை 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு சுருட்டியது. 2012-க்குப் பிறகு மும்பை மண்ணில் இதுவே கொல்கத்தாவின் முதல் வெற்றியாகும்.

கேகேஆர் அணியின் உரிமையாளர் பிரபல நடிகர் ஷாருக்கான். அவரது மகள் சுஹானா கான் இந்த வெற்றிக் குறித்து இன்ஸ்டாகிராமில், “இறுதியாக வென்றுவிட்டோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சிஸ் எனும் இணையத் தொடரில் சுஹானா கானின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் வரலாற்று வெற்றி இது. அபாரமான வெற்றி. அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments