FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜிம்பாப்வே 2-வது ஒருநாள்: இந்திய அணி முதலில் பந்துவீச்சு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:37 pm IST
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும்.

Advertisement

Advertisement

இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன்,ஷுப்மன் கில், இஷான் கிஷன்,தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிராஜ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments