FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கங்குலி, சேவாக்கையே இந்திய அணியிலிருந்து நீக்கினார்கள்: வெங்கடேஷ் பிரசாத்

கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

Updated On : 11 ஜூலை 2022, 4:11 pm IST
பகிர்:

கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, டி20 தொடரில் விளையாடிய இரு ஆட்டங்களிலும் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கோலியின் ஆட்டம் பற்றி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ட்விட்டரில் கூறியதாவது:

இதற்கு முன்பு ஒரு வீரர் சரியாக விளையாடாமல் போனால் அவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக இருந்தாலும் அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்குச் சென்று நன்றாக விளையாடி ரன்கள் எடுத்து மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார்கள். ஆனால் இந்த அளவுகோல் ஒரேடியாக மாறியுள்ளது. சரியாக விளையாடாவிட்டால் சில ஆட்டங்களில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது. இது முன்னேற்றம் அடைவதற்கான வழியே இல்லை.

இந்தியாவில் ஏராளமான திறமைகள் உள்ளன. இதனால் ஒருவரை மதிப்பின் பொருட்டு விளைட வைக்கக் கூடாது. இந்தியாவுக்குப் பல வெற்றிகள் அளித்த அனில் கும்ப்ளேவும் பலமுறை வாய்ப்பில்லாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஒரு நல்ல விஷயத்துக்காக சில நடவடிக்கைகள் தேவை. அதேபோல ஹூடா போன்ற சிறப்பான பல வீரர்கள் அமரவைக்கப்படும்போது, இந்திய டி20 அணியில் ஷ்ரேயஸ் அய்யருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments