FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சதமடிக்க முடியாத சண்டிமல்: பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு

இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு...

Updated On : 19 ஜூலை 2022, 11:17 am IST
தினேஷ் சண்டிமல்
பகிர்:

முதல் டெஸ்டில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. கேலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும் பாகிஸ்தான் அணி 218 ரன்களும் எடுத்தன. 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி, 2-வது இன்னிங்ஸில் 96 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 86, ஜெயசூர்யா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளான இன்று இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சண்டிமல் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments