FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை: ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியதால் சவூதி அரேபியாவில் இன்று தேசிய விடுமுறை!

பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 நவம்பர் 2022, 10:36 am IST
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சி அளித்துள்ளது.

ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா தொடக்க நிமிடங்களிலேயே கோலடித்து முன்னிலை பெற்றாலும், 2-ஆவது பாதியில் திடீரென மீண்ட சவூதி அரேபியா, ஆா்ஜென்டீனா அசந்த நேரம் பாா்த்து 5 நிமிடங்கள் இடைவெளியில் அருமையாக இரு கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் இறுதியில் 2-1 என வென்றது சவூதி அரேபியா. இந்த ஆட்டத்துக்கு முன், தொடா்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த ஆா்ஜென்டீனாவுக்கு, இந்த 37-வது ஆட்டத்தில் தோல்வியைப் பரிசளித்துள்ளது சவூதி அரேபியா.

இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சவூதி அரேபியாவில் இன்று (நவம்பர் 23) தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், அனைத்து அரசு, தனியார் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார். பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1990-ல் ஆர்ஜென்டீனாவை கேம்ரூன் அணி வீழ்த்தியபோதும் அந்நாட்டு அரசு தேசிய விடுமுறையை அளித்தது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments