முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக பிரபல முன்னாள் வீரர் தேர்வு

பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர் 2022, 4:16 pm IST
பகிர்:

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக ஹேடன் பணியாற்றினார். அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 

Advertisement

Advertisement

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சக்லைன் முஸ்டாக்கும் பேட்டிங் பயிற்சியாளராக முகமது யூசுப்பும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஷான் டைட்டும் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த வருட பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து சக்லைன் முஸ்டாக் விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments