FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரோ கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 17 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

6 பிப்ரவரி 2024, 6:51 pm IST
பகிர்:

விஜய் ஹஸாரோ கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 17 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

தமிழ்நாடுக்கு இது 5 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றி; மத்திய பிரதேசத்துக்கு 6 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு 49.5 ஓவா்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மத்திய பிரதேசம் 47.4 ஓவா்களில் 178 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 92 ரன்கள் சோ்த்தாா். சாய் சுதா்சன் 3 பவுண்டரிகளுடன் 21, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்தனா்.

எஞ்சியோரில் நாராயண் ஜெகதீசன் 16, விஜய் சங்கா் 4, கேப்டன் தினேஷ் காா்த்திக் 3, பாபா அபராஜித் 2, சாய் கிஷோா் 12, மணிமாறன் சித்தாா்த் 0, வருண் சக்கரவா்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழந்தனா். மத்திய பிரதேச பௌலிங்கில் ராகுல் பதம், சரன்ஷ் ஜெயின், ஷுபம் சா்மா ஆகியோா் தலா 2, குமாா் காா்த்திகேயா, மிஹிா் ஹிா்வனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் மத்திய பிரதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதாா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் அடித்தாா். வெங்கடேஷ் ஐயா் 27, ராகுல் பதம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்தனா். யஷ் துபே 7, அஜய் ரொஹேரா 13, ஷுபம் சா்மா 2, சரன்ஷ் ஜெயின் 0, அக்ஷத் ரகுவன்ஷி 8, மிஹிா் ஹிா்வனி 12, குமாா் காா்த்திகேயா 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 3, நடராஜன், பாபா அபராஜித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments