FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவராக சேதன் சர்மா மீண்டும் தேர்வு!

இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2023, 5:40 pm IST
பகிர்:

இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரை சேதன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே இந்திய அணியைத் தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு, சேதன் சர்மாவையே மீண்டும் நியமித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

Advertisement

Advertisement

தேர்வுக்குழுவில் பணியாற்ற 600 பேர் விண்ணப்பித்ததில் 11 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களிலிருந்து தேர்வானவர்கள்: 1. சேதன் சர்மா, 2. ஷிவ் சுந்தர் தாஸ், 3. சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத். இவர்களில் சேதன் சர்மாவைத் தேர்வுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவில் உள்ள ஸ்ரீதரன் ஷரத், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 139 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments