FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை தோல்வி: தேர்வுக்குழு தலைவரை நீக்கியது பாக். கிரிக்கெட் வாரியம்!

டி20 உலகக் கோப்பை தோல்வியின் எதிரொலியாக தேசிய தேர்வாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது பாக். கிரிக்கெட் வாரியம்.

Updated On : 10 ஜூலை 2024, 3:19 pm IST
வஹாப் ரியாஸ். - படம்: பிசிபி.
பகிர்:

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடந்த சனிக்கிழமை (ஜூலை 6) வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், மூத்த அணியின் மேலாளர் வாஹாப் ரியாஸ் ஆகியோர் உடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான முடிவினை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தேசிய தேர்வாளர்களான முன்னாள் டெஸ்ட் வீரர் வஹாப் ரியாஸ், அப்துல் ரஸாக் ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி).

அப்துல் ரஸாக் ஆடவர், மகளிர் தேர்வுக்குழுவில் இருக்கிறார். வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் சீனியர் அணியினரின் தலைமை தேர்வாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிசிபி கூறியதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்துல் ரஸாக், வஹாப் ரியாஸ் ஆகியோரது சேவை தேசிய தேர்வாளர்களின் குழுவுக்கு தேவையில்லை என்பதனை இன்றுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. இவர்களுக்கான மாற்று உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களை ஏன் நீக்கினோம் என்பதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணத்தையும் பாக். கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. இந்த தேர்வுக்குழுவில் முகமது யூசூப், அசாத் ஷபீக் அப்படியே இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments