ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
அஸ்தானா: கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இதையடுத்து, போட்டியில் மொத்தமாக இந்தியா 12 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களுடன், 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.
ஆடவருக்கான 48 கிலோ பிரிவில், தமிழகத்தின் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என கஜகஸ்தானின் கரப் யெர்னாரை வீழ்த்த, 57 கிலோ பிரிவில் நிகில் "ஆர்எஸ்சி' முறையில் கஜகஸ்தானின் சபைர் யெர்போலாத்தை தோற்கடித்தார். 60 கிலோ பிரிவில் ஆகாஷ் கோர்கா 4-1 என உள்நாட்டு வீரர் ரஸ்லான் குஸ்பயேவை வென்றார்.
Advertisement
Advertisement
மகளிருக்கான 54 கிலோ பிரிவில் பிரீத்தி 3-0 என கஜகஸ்தானின் பஸாரோவா எலினாவை வீழ்த்த, 57 கிலோ பிரிவில் பூனம் புனியா 4-1 என கஜகஸ்தானின் சகிஷ் அனெலையும், 63 கிலோ பிரிவில் பிராச்சி அதே கணக்கில் கஜகஸ்தானின் அனார் தர்சின்பெக்கையும் சாய்த்தனர். 75 கிலோ பிரிவில் முஸ்கான் 3-2 என்ற புள்ளிகளில் உஸ்பெகிஸ்தானின் ஜோகிரோவா அஸிராவை வென்றார்.
இதனிடையே, பிரீத் மாலிக் (67 கிலோ), குட்டீ (48 கிலோ), தமன்னா (50 கிலோ), சானே (70 கிலோ), அல்ஃபியா பதான் (81 கிலோ) ஆகியோர் இறுதிச்சுற்றில் வீழ்ந்து வெள்ளி பெற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.