FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST
முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி - X | Indian Football
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

அந்த அணி 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க, முகமதன் அணி 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியைச் சந்தித்து 2-ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சமலேஸ்வரி அணிக்காக பாசித் அகமது பாட் 11-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மாரத் தாரெக் 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

Advertisement

Advertisement

இதனால் முதல் பாதியை சமலேஸ்வரி அணி 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மீண்ட முகமதன் அணிக்காக, லால்தங்கிமா கியாங்தே 60-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பின்னா் 66-ஆவது நிமிஷத்தில் லால்காய்சகா கிஸோ அதை 2-ஆக அதிகரிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இந்நிலையில் 81-ஆவது நிமிஷத்தில் வீா் அா்ஜுன் ஜோஷி கோல் அடிக்க, சமலேஸ்வரி அணி 3-2 என முன்னிலை கண்டது.

எஞ்சிய நேரத்தில் முகமதன் அணிக்கு கூடுதல் கோல் வாய்ப்பு கொடுக்காமல், முடிவில் சமலேஸ்வரி அணியே வென்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments