சாம்பியன்ஸ் லீக்: முதல் போட்டியில் 16 அணிகள் வெற்றி, 4 அணிகள் டிரா!
சாம்பியன்ஸ் லீக்கில் முதல் போட்டியில் வென்ற அணிகள் குறித்து...
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் இதுவரை 36 அணிகள் விளையாடியுள்ளன. அதில் 16 அணிகள் வெற்றியையும் 4 அணிகள் சமனிலும் முடித்துள்ளன.
முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் 12 அணிகள் வெற்றியைப் பெற்றன. இரண்டாவது நாளில் 4 அணிகள் வெற்றியையும் 4 அணிகள் சமனிலும் முடித்தன. முதல் சுற்றில் மொத்த அணிகளும் 69 கோல்கள் அடித்துள்ளன.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக் அணி போடோ/க்ளிமிட் அணியை 5-0 என வீழ்த்தியது. இதில் ஜமால் முசியாலா 47ஆவது நிமிஷத்திலும் ஹாரி கேன் 61ஆவது நிமிஷத்திலும் அல்போன்ஸோ டேவிஸ் 77ஆவது நிமிஷத்திலு கோல் அடித்தார்கள்.
Advertisement
Advertisement
நட்சத்திர வீரர் மைக்கேல் ஒலிஸே 83, 90+2ஆவது நிமிஷத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அடுத்த போட்டியில் ஆர்சி லென்ஸ் அணி 3- 2என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பிராக் அணியை வீழ்த்தியது. இதில் 49ஆவது நிமிஷத்தில் ஸ்லாவியா அணியின் மிகுலாஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
அடுத்த போட்டியில் முதல்முறையாக 70 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய கோமா 1907 அணி 4-1 என வரலாற்று வெற்றியைப் பெற்றது.
அடுத்த போட்டியில் ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் ஷபா அணியை வீழ்த்தியது.
ரோமா - ஃபெனர்பாகே, பிஎஸ்வி - எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க் போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தன. மொத்தம் 36 அணிகளில் டாப் 8 இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் 9-24 வரை இடம்பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடி அதிலிருந்து 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகுமென்பது கடந்த சீசன் முதல் உருவாக்கப்பட்ட புதிய நடைமுறை என்பதும் கவனிக்கத்தகது.
சாம்பியன்ஸ் லீக் பட்டியல்
1. பிஎஸ்ஜி
2. பயர்ன் மியூனிக்
3. பார்சிலோனா
4. மான்செஸ்டர் யுனைடெட்
5. கோமோ 1907
6. எஸ்சிபி
7. விஎஃப்பி ஸ்டட்கார்ட்
8. மான்செஸ்டர் சிட்டி
Champions League: 16 teams win, 4 teams draw in the first round of matches!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.