உலக சாதனை படைத்த 43 வயது உகாண்டா வீரர்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 43 வயது உகாண்டா பந்து வீச்சாளர் புதிய சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் குரூப் சி-யில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி காலை 5மணி ) மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய உகாண்டா அணி 18.2 ஓவரில் 78/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் உகாண்டா பந்து வீச்சாளர் 43 வயது உகாண்டா பந்து வீச்சாளர் புதிய சாதனை படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
4 ஓவர்கள் வீசிய பிராங்க் நுசுபுகா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையில் இதுதான் சிறந்த எகானமியாக இருக்கிறது. இதற்கு முன்பாக அன்ரிச் நார்ஜே இலங்கைக்கு எதிராக 7 ரன்கள் கொடுத்திருந்தார்.
43 வயதில் இந்த சாதனையை படைத்த பிராங்க் நுசுபுகாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.