FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக சாதனை படைத்த 43 வயது உகாண்டா வீரர்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 43 வயது உகாண்டா பந்து வீச்சாளர் புதிய சாதனை படைத்துள்ளார்.

6 ஜூன் 2024, 1:42 pm IST
பிராங்க் நுசுபுகா - படம்: உகாண்டா கிரிக்கெட் / எக்ஸ்
பகிர்:

டி20 உலகக் கோப்பையில் குரூப் சி-யில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி காலை 5மணி ) மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய உகாண்டா அணி 18.2 ஓவரில் 78/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் உகாண்டா பந்து வீச்சாளர் 43 வயது உகாண்டா பந்து வீச்சாளர் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

4 ஓவர்கள் வீசிய பிராங்க் நுசுபுகா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையில் இதுதான் சிறந்த எகானமியாக இருக்கிறது. இதற்கு முன்பாக அன்ரிச் நார்ஜே இலங்கைக்கு எதிராக 7 ரன்கள் கொடுத்திருந்தார்.

43 வயதில் இந்த சாதனையை படைத்த பிராங்க் நுசுபுகாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments