முகப்பு
டி20 உலகக் கோப்பை

ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டிய நியூசிலாந்து கேப்டன்!

ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

Updated On : 7 ஜூன் 2024, 7:58 pm IST
கேன் வில்லியம்சன் (கோப்புப்படம்)
பகிர்:

ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த அணியை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களிடம் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசை இருக்கிறது. டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அதிகம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் தங்களது ஆட்டத்தை மேலும் மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர்களுக்கு அதிக அளவிலான அனுபவம் அண்மைக் காலமாக கிடைத்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். அவர்கள் மிகவும் திறன் வாய்ந்த அணி. உலகத் தரத்திலான பந்துவீச்சாளரான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கிறார். நவீன் உல் ஹக் மற்றும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் சவாலானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments