முகப்பு
டி20 உலகக் கோப்பை

‘சூப்பர் 8’ சுற்றுக்கு தேர்வானது குறித்து ஆப்கன் கேப்டன் பெருமிதம்!

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வானது குறித்து பேசியுள்ளார்.

Updated On : 14 ஜூன் 2024, 11:37 am IST
ரஷித் கான் - Ramon Espinosa
பகிர்:

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா 95 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 15.1 ஓவரில் 101/3 ரன்கள் எடுத்து வென்றது.

3 விக்கெட்டுகள் எடுத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Advertisement

Advertisement

இந்த வெற்றி குறித்து ஆப்கன் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

சூப்பர் 8 சுற்றுகுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உணர்கிறோம். முதல் போட்டியிலிருந்து வீரர்களின் முயற்சி அற்புதமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிகிறது. அதை சரியாக செய்துஎ நது வேலையை எளிதாக்கிவிட்டார்கள். குர்பாஜ் மாதிரி களத்தில் நான் இருக்கிறேன் என சென்று பேட்டிங் விளையாடவும் பவர்பிளேவில் பரூக்கி மாதிரி விக்கெட் எடுக்கவும் ஆள்கள் இருப்பது முக்கியம். பேட்டர்கள் அதிரடியாக ஆடும்போது பௌலர்களாக நாமும் சாதகமான ஆடுகளங்களில் அதிரடியாக பந்துவீச வேண்டும்.

தொடக்க வீரர்கள் 2 போட்டிகளில் நன்றாக விளையாடினார்கள். இன்று மற்றவர்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு உள்ளூர் போட்டிகளில் நல்ல அனுபவம் இருந் தது. அனைவருமே நல்ல பார்மில் இருந்தார்கள். ஐபிஎல் போன்று உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவது எங்களுக்கு உதவியது. செயின்ட் லூக்கா அணிக்கு சிலர் விளையாடியுள்ளார்கள். அதனால் இதன் ஆடுகளம் எப்படி என எங்களுக்கு உதவியது.

எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் நாங்கள் தகவமைத்து சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டி மே.இ.தீ. உடனும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments