முகப்பு
தமிழ்நாடு

காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீர் 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீரால் நிரம்பியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 5:39 pm IST
பகிர்:

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீரால் நிரம்பியுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாலை 04.30 மணியளவில் காவிரி மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் தொண்டர்கள் மற்றும் திமுகவினரின் கண்ணீரால் நிரம்பியுள்ளது.  

Advertisement

Advertisement

சற்று முன்பு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கண்களில் நீருடன் காவேரி மருத்துவமனைக்குள் செல்கின்றனர்.

அதே நேரம் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும், கருணாநிதியின் மருமகளான மோகனா தமிழரசு ஆகியோர் கண்ணீர் வழிய மருத்துவமனைக்குள் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments