முகப்பு
தமிழ்நாடு

கிராம சபைக் கூட்டம்: அரசுக்கு இறுதி அவகாசம்

கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அரசுக்கு இறுதி அவகாசம் அளித்தைத் தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.