முகப்பு
தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?

மதுரை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

Updated On : 11 ஜனவரி 2022, 12:44 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மதுரை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

பொங்கல் விழாவையொட்டி மதுரையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கரோனா பரவலினால் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றுவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். ஆலோசனையில் கலந்துகொள்ள ஜல்லிக்கட்டு குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.