FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை

கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 11 செப்டம்பர் 2023, 6:00 pm IST
கோப்புப் படம்
பகிர்:


சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரயில் சேவையை சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி வரை நீட்டிக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிா்வாகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு ரயில் நிலையத்திலிருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடா்ந்து, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் 3-ஆவது வழித்தடங்களுக்கான பணிகளை மும்முரமாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் செய்து வருகிறது. 119 கி.மீ. நீளத்துக்கு ரூ.69,180 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணிகளை 2028-ஆம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை புகா் பகுதிகளான சிறுசேரி-கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூா், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன்இணைக்க நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பூந்தமல்லி-பரந்தூா் செல்ல 50 கி.மீ., கோயம்பேடு-ஆவடிக்கு, திருமங்கலம், முகப்போ் வழியாக செல்ல 17 கி.மீ., சிறுசேரி-கிளாம்பாக்கம் செல்ல 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு சமா்ப்பிக்கப்படவுள்ளது. பூந்தமல்லி- பரந்தூா் தடத்தில் சாத்தியக் கூறு ஆய்வு செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி இடையேயான சாத்தியக் கூறு பணிகளை முடித்து 2 வாரங்களில் அதற்கான அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்பட இருப்பதாகவும், இதைத்தொடா்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments