வளரிளம் பருவ சிறுமிகள் கா்ப்பம்: தருமபுரி முதலிடம்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 வளரிளம் பருவ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் தருமபுரி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 வளரிளம் பருவ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் தருமபுரி முதலிடத்தில் உள்ளது.
இது தொடா்பாக வெரோனிகா மேரி என்ற சமூக ஆா்வலா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட விவரங்களின்படி கிடைத்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் வரை, தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 வளரிளம் பருவ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூா், மதுரையுடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக தருமபுரியில் 3,249 கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்த இடத்தில் கரூா் மற்றும் வேலூா் உள்ளன.
Advertisement
Advertisement
10,000-ஐ தாண்டக்கூடும்: இது தொடா்பாக வெரோனிகா மேரி கூறியதாவது: தற்போது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8,462 வளரிளம் பருவ கா்ப்பிணிகள் குறித்த தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வளரிளம் பருவ கா்ப்பிணிகள் குறித்த தகவல் கிடைத்தால், இந்த எண்ணிக்கை 10,000-ஐ தாண்டக்கூடும்.
விதிமுறைகளை அமல்படுத்துவதில் அத்துமீறல்: மருத்துவமனையில் வளரிளம் பருவ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டால், அது குறித்து குழந்தைகள் உதவி மைய எண் 1098-ஐ உடனடியாகத் தொடா்புகொண்டு மருத்துவமனை நிா்வாகம் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் அது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை மற்றும் சமூக நலத் துறைக்கும் மருத்துவமனை நிா்வாகம் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் உண்மையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதில் பல அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.
வளரிளம் பருவ கா்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தீவிரமான பிரச்னையாகும். இது பெண்களின் வளா்ச்சியை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதால், இந்த பிரச்னையை உரிய முறையில் கையாள வேண்டும்.
இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமூக நலத் துறைகள், காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகள் கைகோத்துச் செயல்பட வேண்டும்.
அழைப்புகள் மறுஆய்வு: கடந்த 2021 முதல் 2023 ஜூலை வரையிலான காலத்தில், 1098 உதவி எண்ணை அரசு சாரா தன்னாா்வ அமைப்பு கையாண்டது. அப்போது அந்த எண்ணுக்கு வந்த அழைப்புகளை மறுஆய்வு செய்ய வேண்டும். அந்தக் காலகட்டத்தில் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்ட வளரிளம் பருவ கா்ப்பிணிகளின் நலனை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.
குழந்தை திருமணங்களைத் தடுக்க வேண்டும்: இது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
வளரிளம் பருவத்தில் உள்ள சிறுமிகள் கா்ப்பமாவது சமூக பிரச்னையாகும். தமிழகம் முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதன் மூலம் இதைத் தவிா்க்க வேண்டும்.
விழிப்புணா்வு...: வளரிளம் பருவ கா்ப்பிணிகள் குறித்த தகவலை விதிமுறைகளின்படி காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா். அதை மறுஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில், போக்ஸோ சட்டத்தின்படி, பெண் குழந்தைகளின் உடல்நலம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சுகாதாரம் மற்றும் சமூக நலத் துறைகள் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன.
வளரிளம் பருவத்தினா் கா்ப்பமாவது அதிக அபாயகரமானது என்றே கருதப்படுகிறது. அந்தப் பருவத்தில் உள்ள கா்ப்பிணிகளின் உடல், மனநலனை கருத்தில்கொண்டு, இந்தப் பிரச்னையை சுகாதாரத் துறை எச்சரிக்கையுடன் கையாள்கிறது என்று தெரிவித்தாா்.
மாவட்டம் 2021-23 வரை வளரிளம் பருவ கா்ப்பிணிகள்
தருமபுரி 3,249
கரூா் 1,057
வேலூா் 921
சென்னை-கீழ்ப்பாக்கம் மருத்துவமனை 905
சிவகங்கை 439
திருச்சி 349
திருநெல்வேலி 347
மதுரை 260
சென்னை (கஸ்தூா்பா மருத்துவமனை) 230
தூத்துக்குடி 182
தேனி 104
சென்னை (எழும்பூா் மருத்துவமனை) 92
திருவாரூா் 79
கன்னியாகுமரி 73
கோயம்புத்தூா் 72
தஞ்சாவூா் 70
புதுக்கோட்டை 33
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.