கோப்புப் படம் 
தமிழ்நாடு

தீபாவளி: சிவகாசி பட்டாசுகள் ரூ. 6,000 கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை!

DIN

சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பட்டாசு தொழிலின் மையமாக சிவகாசி கருதப்படுகிறது. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 70 சதவீதம் இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசியில் ஏறத்தாழ 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் தயாரித்த ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனையாகியுள்ளது.

பட்டாசு விற்பனைத் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பட்டாசு தயாரிப்பில் முக்கியப் பொருளான பேரியம் நைட்ரேட் மீது உச்ச நீதிமன்றம் தடை விதித்து, சரவெடி பட்டாசு தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்ததால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு 30 சதவீதம் வரையிலான உற்பத்தி குறைந்துள்ளது.

பட்டாசு உற்பத்தியாளர்களில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட ஆலைகளில் சரவெடிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பேசிய காளீஸ்வரி பட்டாசு ஆலை உரிமையாளர் ஏ.பி.செல்வராஜன், “சத்தமாக வெடிக்கும் வெடிகள் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம். அதில் 20 சதவீதம் சரவெடிகளே. அதனைத் தயாரிக்கும் பல உற்பத்தியாளர்கள் ஆலைகளை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர். இதனால், அங்கு வேலை பார்த்த பல உற்பத்தியாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர்” என்று கூறினார்.

கூடுதலாக, கனமழை காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி வழக்கமான அளவில் இல்லாமல் 75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பட்டாசு தயாரிப்பின்போது போது நடக்கும் பல விபத்துகளால், உயிர் இழப்புகள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சிவகாசியில் 17 விபத்துகள் நிகழ்ந்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண மாட்டேன்: மாதம்பட்டி ரங்கராஜ்

மெட்ரோ ரயில் 4-வது வழித்தடம்: கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!

தீபாவளி... அவ்னீத் கௌர்!

குட் பேட் அக்லி மிகப்பெரிய லாபமில்லை: தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT