மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்குள்ள ராகுல் காந்தியின் புகைப்படங்களில் கருப்பு வண்ணப்பூச்சு பூசியதோடு பதாகைகள் மற்றும் கொடிகளை சிலர் கிழித்ததாகக் கூறப்படுகிறது.
அதோடு அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அலுவலகத்திற்கு வெளியே டயர்களை எரித்ததிலும், வளாகத்திற்குள் நுழைய முயன்றதிலும் மற்ற ஆதரவாளர்களுடன் சேர்ந்து மூவர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தோஷ் ராஜ்வா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடர்கிறோம், ராகேஷ் சிங் மற்றும் பிறரைக் கைது செய்ய முயற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
இதற்கிடையில், முக்கிய குற்றவாளியான உள்ளூர் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பிகாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மோசமான வார்த்தைகளால் திட்டிய விடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இதனைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராகேஷ் சிங் தலைமையிலான, போராட்டத்தின்போது இந்தத் தாக்குதலை நடத்தப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
Three persons were arrested on Saturday in connection with an attack on the West Bengal Pradesh Congress Committee headquarters here the previous day, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.