தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பாக வருகிற சனிக்கிழமையில் (மார்ச் 23), ராமேஸ்வரம் - தங்கச்சிமடம், வலசை பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கள்கிழமை 403 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கென்னடி என்பவரது படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
மேலும், படகில் இருந்த மீனவர்கள் சங்கர், அர்ச்சுணன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.