திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் மரிய வில்சன் பேசியது பற்றி...
திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் என். மரிய வில்சன் பேசிவருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
“கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றி நிதி ஆதாரத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியில் அரசு டெண்டர்களை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தற்போது டெண்டர்களில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை தவெக அரசு கொண்டு வந்துள்ளது. இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர்கள் டெண்டர்களில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Financial crunch hinders project implementation! Minister Maria Wilson
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.