பட்ஜெட் 2026! ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே புதிய மெட்ரோ ரயில் திட்டம்!
ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே செயல்படுத்தப்படவுள்ள புதிய மெட்ரோ ரயில் திட்டம் குறித்து...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக பேசுகையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்களைக் கொண்ட கட்டம்-IIன் பணிகள் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கி.மீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம்-II-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.
(i). சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை.
(ii). ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை.
(iii). ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை.
கூடுதல் மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Regarding the new metro rail project proposed between Hosur and Bommasandra, Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.