FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இனி மழையில் நனையாது! விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்பாய்கள்!

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவிப்பு

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 10:52 am IST
தார்பாய்கள் - dipr
பகிர்:

வேளாண் விளைபொருள்களை மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில், ரூ.10 கோடியில் தார்பாய்கள் வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் வினோத், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால், விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

பட்ஜெட்டில், ஒரு முக்கிய அறிவிப்பாக தானியப் பாதுகாப்பு உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

அரசு கொள்முதல் கிடங்குகளுக்குக் கொண்டு வரப்படும் வேளாண் விளைப்பொருள்கள் அவ்வப்போது மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அதிகம் சேதமடைந்து வரும் நிலையில், தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments