FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்!

காவிரி பிரச்னையில் தைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும் என்று உதயநிதி சவால்...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:08 pm IST
உதயநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய் - X
பகிர்:

காவிரி பிரச்னையில் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் ஜோசப் விஜய் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “மேக்கேதாட்டு பிரச்னை, பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை என தவெக ஆட்சியில் விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், விவசாயிகளுக்கு ஆதரவாக, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், ”நாளைய கூட்டத்தில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, காவிரி பிரச்னைகள் பற்றி விவாதிக்க பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அவர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். காவிரி பிரச்னையில் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் பதிலளிக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

summary

If he has the courage, let the Chief Minister open his mouth! Udhayanidhi's challenge!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments