அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்
அரசுப் பேருந்தில் தக்காளி வெற்றிக் கழகம் என்று பெயர்ப் பலகையில் ஓடிக் கொண்டிருந்தது குறித்து போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில், 'தக்காளி வெற்றிக் கழகம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு பணிமனையிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் பெயர்ப் பலகையில் தக்காளி வெற்றிக் கழகம் என்ற வாசகம் மின்னொளியால் மிளிர்ந்து கொண்டிருந்தது.
இது பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.
Advertisement
Advertisement
எப்படி, அரசுப் பேருந்தின் பெயர்ப் பலகையில் இவ்வாறு மிகப்பெரிய பிழை ஏற்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் பெயர்ப் பலகை விவகாரம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பார்வைக்குச் சென்றது. உடனடியாக எம்டிசி விளக்கம் கொடுத்துள்ளது. அதில், சில நாள்களுக்கு முன்பு, மர்ம நபர்களால் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டுவிட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட விளக்கத்தில், அந்தப் பேருந்தின் புகைப்படம் இணைக்கப்பட்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள பேருந்தின் வழித்தட விவர (Route Board) பலகை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது.
மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை செய்த மர்ம நபர்கள் யார், எப்போது இது நடந்தது என்பது போன்ற எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
thakkali Vetri kazhagam on gov bus What happened mtc reply
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.