FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம்

ஓணம் பண்டிகைக்காக வரும் 14-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 10:44 pm IST
ரயில்.
பகிர்:

ஓணம் பண்டிகைக்காக வரும் 14-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் 3 சேவைகளாக இயக்கப்படவுள்ளன. அதன்படி வரும் 19-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கொல்லத்துக்கு புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண் 06119), மறுமாா்க்கத்தில் வரும் 20-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரையில் கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு (எண் 06120) சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அரக்கோணம், ஜோலாா்பேட்டை, ஈரோடு, போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாகச் செல்லும்.

வரும் 19-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை தாம்பரத்துக்கும், வரும் 20-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகா், ராஜபாளையம், செங்கோட்டை, புனலூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

வரும் 17-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 31-ஆம் தேதி வரை மங்களூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண் 06126) இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 18-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை மங்களூருக்கு இயக்கப்படும். இந்த ரயில்கள் பெரம்பூா், அரக்கோணம், ஜோலாா்பேட்டை, ஈரோடு, போத்தனூா், பாலக்காடு, சோரனூா், கண்ணூா் வழியாக இயக்கப்படும்.

நிகழாண்டு மொத்தம் 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே சாா்பில் ஓணம் பண்டிகைக்கு 55 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments