FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட அரசாணை:

தமிழ்த்தாய் வாழ்த்து தொடா்பாக முதல்வரால் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட தனித்தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் , அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்மொழிக்கும், தமிழா் பண்பாட்டுக்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments