தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்!
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் எனப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் பற்றி...
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத்தீர்மானமத்தை கொண்டுவந்து முதல்வர் விஜய் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, நம் உயிர், பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும். நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும். இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் அது தனி பவர்.
உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்று போதாதா தமிழின் பெருமையை சொல்ல. தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். அரசு விழாக்களின் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என 1970இல் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ், தமிழர் பண்பாட்டுக்கு செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு தமிழ்த்தாய் வாழ்த்து.
Advertisement
Advertisement
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை, அரசாணைகளின் வாயிலாக பின்பற்றப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.