சுதந்திர தினம்: சிபிஐ -யில் சிறப்பாகப் பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த காவலருக்கு விருது!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய புலனாய்வுத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதாக மதுரையை சேர்ந்த காவலர் பால்பாண்டியனுக்கு விருது
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய புலனாய்வுத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதாக மதுரையை சேர்ந்த காவலர் பால்பாண்டியனுக்கு இன்று விருது வழங்கப்படவுள்ளது.
மத்திய புலனாய்வுத் துறையில் சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கமும், தகுதியான சேவைக்கான பதக்கமும் இன்று வழங்கப்படவுள்ளது.
இதன்படி, மத்திய புலனாய்வுத் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக 21 பேருக்கும், சேவையைப் பாராட்டி 15 பேருக்கு தகுதியுடைய சேவைக்கான பதக்கம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இவர்களில் சிறப்பான சேவையைப் பாராட்டி தகுதியுடைய சேவைக்கான பதக்கத்தை மதுரையைச் சேர்ந்த பால்பாண்டியன் பெறவிருக்கிறார். இவர் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இவர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து பதக்கம் பெறுகிறார்.
Madurai Constable Pal Pandian has received the Medal for Meritorious Service in recognition of service in the CBI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.