திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு! பக்தர்கள் புகார்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டது பற்றி..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று (ஆக. 26) ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆய்வு செய்த நிலையில் அவரிடம் பக்தர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட பல மணி நேரம் காத்திருப்பதாகக் கூறினர்.
பக்தர்கள் அளித்த புகார்களை கேட்ட அமைச்சர் ரமேஷ், இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.
அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Minister Ramesh inspects Tiruvannamalai Annamalaiyar Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.