FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 15 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 15 ஜூலை 2026, 6:22 pm IST
பகிர்:
Updated On : 15 ஜூலை 2026, 6:22 pm IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணையை எதிர்த்த மனுவை தமிழ்நாடு அரசு புதன்கிழமை திரும்பப் பெற்றுள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 4:56 pm IST

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இளங்கலை (MBBS) மருத்துவ இடங்களைப் பெற்று மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 3:22 pm IST

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை

பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 15 ஜூலை 2026, 3:22 pm IST

சொல்ல மறந்த கதை! ஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அதிசய ரயில் நிலையம்!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே ரூ.6 கோடியில் புதுப்புக்கப்பட்ட நிஷாத்புரா ரயில்நிலையம் விரைவில் உலக அதிசயங்களில் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

Updated On : 15 ஜூலை 2026, 3:22 pm IST

தனிக்கவனம் பெற்ற மதுரை! இயல்பிலிருந்து மாறுவதால் மக்கள் அதிர்ச்சி

கடந்த செவ்வாய்க்கிழமை, நாட்டிலேயே மிகவும் வெப்பமான நகரமாக மதுரை நகரம் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இயல்பான அளவை விட 5.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மதுரையில் வெப்பம் வாட்டி வருகிறது.

Updated On : 15 ஜூலை 2026, 2:31 pm IST

திருச்செந்தூர் மாநாடு ரத்து

வீ தி லீடர்ஸ் (We The Leaders) - இது நம்ம இயக்கம் அமைப்பின் திருச்செந்தூர் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 2:30 pm IST

சத்தியாகிரக போராட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்

Updated On : 15 ஜூலை 2026, 2:30 pm IST

தமிழக பேருந்துகள் நிறுத்தம்

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 15 ஜூலை 2026, 2:24 pm IST

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

திருப்பூர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

Updated On : 15 ஜூலை 2026, 1:33 pm IST

மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவு: ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

ஓசூர் அருகே மாநில எல்லை அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்புகள் சார்பில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட வேண்டும், பெங்களூர் மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரம் பெருக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 12:40 pm IST

தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், 'அமைச்சரவையில் இடம்பெறுவோம்' என எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை - பெ. சண்முகம்

Updated On : 15 ஜூலை 2026, 12:40 pm IST

முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு!

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

செந்தில் பாலாஜி கடிதம்

தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசியாத த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் இதுவரை 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On : 15 ஜூலை 2026, 10:42 am IST

தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

மாணிக்கம் தாகூர் கண்டனம்

கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

மோடி புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்

நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர் காமராஜர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

நாகர்கோவில் காவல் மரணம்

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மூவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

முதல்வர் விஜய் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

முதல்வர் விஜய் புகழாரம்

மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் என முதல்வர் ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments