முகப்பு
தமிழ்நாடு

காஞ்சியில் களைகட்டிய ஜன நாயகன் வெளியீடு: ரசிகர்களுக்கு அசைவ பிரியாணி!

காஞ்சிபுரத்தில் களைகட்டிய ஜன நாயகன் பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடியது குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 10:33 am IST
காஞ்சியில் களைகட்டிய ஜன நாயகன் வெளியீடு - டிஎன்எஸ்
பகிர்:

நடிகரும் - தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜன நாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானதை ஒட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் காலை முதல் காட்சி 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் முன்பு ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும், கற்பூர தீபம் காண்பித்தும், டிஜே இசைக்கு நடனமாடி கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் பாடலை பாடவிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கூடியதால் காஞ்சிபுரம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

முதல்வர் நடித்த திரைப்படம் வெளியாவதை ஒட்டி திரையரங்கம் அருகே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் பட்டாசை கையில் பிடித்து மேலே எரிந்து வருகிறார்.

திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கப்படவுள்ளது.

ஜன நாயகன் படம் சாதனை படைக்க வேண்டும் என்றும் ஆனால் எங்கள் தளபதியின் கடைசி படம் இது என்பது எங்களுக்கு மிகுந்த கவலையாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

summary

'Jana nayagan' launch event in Kanchi sees enthusiastic turnout

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments