தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வரவேற்கிறேன்: அமைச்சர் நிர்மல் குமார்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வரவேற்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வரவேற்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இது ஒன்று மட்டுமே நீட்டுக்கான தீர்வல்ல, நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நம் நிலைப்பாடு. கண்டிப்பாக மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு ராஜிநாமாவை மட்டும் வைத்து மூடி மறைக்க முடியாது.
Advertisement
Advertisement
மூன்று லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசின் பதில் என்ன? இதனை முன்பே செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் தவறு நடந்தபிறகு மூடி மறைக்கப்படுகிறது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. நீட் தேர்வு மத்தியஅரசின் தவறான கொள்கை முடிவு.
கல்வியை மாநில பட்டியலுக்கு வேண்டும் என்பது நமது கோரிக்கை, முதற்கட்டமாக ராஜிநாமா செய்யப்பட்டு்ள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு மத்திய அரசு மாற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Minister Nirmal Kumar stated that he welcomes the resignation of Union Education Minister Dharmendra Pradhan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.