இபிஎஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை: கே.பி. முனுசாமி
இபிஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இபிஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டியில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துகளைக் தான்தோன்றித்தனமாக பதிய வைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நெல் மேல் குருவியைப் போல எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்றவர் ஆதவ் அர்ஜுனா.
முதலில் திமுக, விசிக, அதிமுக என பல கட்சிகளுக்குச் சென்று இறுதியாக தவெகவில் இணைந்து அமைச்சராகியுள்ளார். அதிமுக தொண்டர்கள் வாக்களித்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது என்று கூச்சமோ வெட்கமோ இல்லாமல் கூறுகிறார். இந்த போக்கை ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இல்லையெனில் அவருக்கு எதிராக நேரடியாக போராட்டத்தில் களமிறங்குவேன் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் நாகரிகம் என்று ஒன்று உள்ளது. தான்தோன்றித்தனமாக ஆதவ் அர்ஜுனா பேசக்கூடாது. அதிமுக பொதுச் செயலாளர் பற்றி பேச, பல கட்சிகளுக்குச் சென்று வந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை.
அதிமுகவுக்கு துரோகம் புரிந்து சென்ற சந்தர்ப்பவாதிகளை வரவேற்பதோடு ஆதவ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற தவெகவில் அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார்.