FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயம்பேட்டில் இளம்பெண்களை காா் ஏற்றி கொலை செய்த வழக்கு: இருவா் பிணை கோரி மனு

சென்னை கோயம்பேட்டில் இளம்பெண்கள் மீது காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைதான இருவா் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கோப்புப் படம்
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் இளம்பெண்கள் மீது காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைதான இருவா் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

விழுப்புரத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த இளம்பெண் யான்சி, சென்னையில் உள்ள அவரது தோழிகளை சந்திக்க கடந்த மே 30-ஆம் தேதி வந்தாா். அப்போது கோயம்பேட்டில் உள்ள தனியாா் மதுபான விடுதிக்கு யான்சி மற்றும் அவரது தோழி சென்றனா். அங்கு அவா்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா்களை அங்கிருந்த பவுன்சா்கள் வெளியேற்றினா்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் தனியாா் மதுபான விடுதியில் இருந்து இரவில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய யான்சி மற்றும் அவரது தோழி மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அவரது தோழி பவுசியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீஸாா், தியாகராஜன், பாரதி உள்ளிட்ட 7 போ் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி கைது செய்தனா். இவா்களில், தியாகராஜன் மற்றும் பாரதி ஆகியோா் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், சம்பவம் நடந்தபோது நாங்கள் அங்கு இல்லை. இந்த சம்பவத்தில் எங்களைத் தொடா்புபடுத்த நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. எங்களுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments