புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு!
புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு
புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி, மாநில சட்டம் - ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மனுவின்படி, ஏப்ரல் 5 ஆம் தேதியில் புதுச்சேரியில் காலாப்பட்டு நுழைவாயில், முதியால்பேட்டை மணிகுண்டு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, உப்பளம் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் மார்ச் 28 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், 300 பேர் மட்டுமே கூடுவதற்கு உகந்த இடத்தில் 3,000 பேருக்கு அனுமதி தர முடியாது என தவெகவின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
TVK Petitions for Permission for Vijay's Campaign in Puducherry!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.