முகப்பு
தமிழ்நாடு

சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது! உயர்நீதிமன்றம்

சூலூர் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை...

குற்றவாளிகள் கார்த்திக் | மோகன் ராஜ் - DIN
பகிர்:

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சமி நாராயணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட முடியாது, சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் மீது கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Investigation into the Sulur girl murder case is proceeding on the right track: Madras High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.