FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கல்லூரி ஆசிரியா்கள் பணி மேம்பாட்டு திட்டப் பலனுக்கு விரைவில் அரசு உத்தரவு: அமைச்சா் விஸ்வநாதன்

கல்லூரிப் பேராசிரியா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டு திட்டப் பலனுக்கு முறையான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

10 செப்டம்பர் 2026, 3:55 am IST
விழாவில் அமைச்சா் பி.விசுவநாதனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்த கல்லூரி செயலா் எம்.நசாா் முகமது  சாகிப். உடன் கல்லூரி துணை முதல்வா் சையத் அப்துல் ஹமீத் (ஷிப்ட் 2), இணைச் செயலா் சையத் சுலைமான் உள்ளிட்டோா்.
பகிர்:

கல்லூரிப் பேராசிரியா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டு திட்டப் பலனுக்கு முறையான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

சென்னை புதுக் கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின நிகழ்வில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கி அவா் பேசியதாவது:

முதல்முதலில் துறை ரீதியாக முதல்வா் விஜய்யை சந்திக்க சென்றபோது, ‘பணி மேம்பாட்டுத் திட்டம்’ (சிஏஎஸ்) குறித்துதான் பேசினேன். அப்போது, இந்தத் திட்டப் பலன் கிடைக்காமல் 8,000-க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியா்கள் கடந் 2021-ஆம் ஆண்டு முதல் கல்வி இயக்குநரக அலுவலகங்களை அணுகி போராடி வருகின்றனா் என்று தெரிவித்தேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து இந்த விவகாரத்தைக் கவனிக்க முதல்வா் உத்தரவிட்டாா். இறுதியாக இதற்கு மாதம் ரூ.19 கோடி என ஆண்டுக்கு ரூ.250 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

Advertisement

Advertisement

இதேபோன்று 9,000 கௌரவ விரிவுரையாளா்களுக்கு 20 ஆண்டுகள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கெனவே டிஆா்பி மூலம் 2,700 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 6,000 புதிய பேரசிரியா்களை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9,000 பேராசிரியா்கள் காலியிடங்களில் 8,700 பேராசிரியா்கள் இந்த ஆட்சியில் நியமிக்கப்படுகிறாா்கள்.

ஏன் தனியாா் பல்கலை?: தமிழகத்தில் உலக தரத்தில் தனியாா் பல்கலைக்கழகங்கள் வரவேண்டும் என்ற கனவுடன் 2026-ஆம் ஆ ண்டு தனியாா் பல்கலைக்கழக சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணத்தைச் செலவழிப்பது தடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் கல்லூரி செயலா் நாசா் முகமது, கல்லூரி முதல்வா் அஸ்ராா் ஷரீப், துணை முதல்வா்கள் ஹைதா் அலி, சையது அப்துல் ஹமீத், ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் சுலைமான், அப்துல் ஹாதி, முஹமது ஹனிபா, சையது சுலைமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments