FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு தெரிவித்துள்ளது தொடர்பாக..

10 செப்டம்பர் 2026, 1:32 pm IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்த இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன். - எக்ஸ்
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வியாழக்கிழமை காலை(செப்.10) வந்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.

அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

summary

C.K.Tamizharasan extends support to the DMK alliance in the Maduranthakam and Dharapuram by-elections!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments