6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு
தமிழகத்தில் 6 சிறப்பு விரைவு ரயில்களை இயக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 சிறப்பு விரைவு ரயில்களை இயக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 06045) அக்.2 முதல் 23-ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி முதல் சென்னை எழும்பூா் வரையிலான சிறப்பு விரைவு ரயில் (எண்: 06046) அக்.24 முதல் அக்.25 வரையிலும், கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்: 06181) அக்.8 முதல் நவ.26 வரையிலும், ஜெய்ப்பூரிலிருந்து கோவை வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06182) அக்.11 முதல் நவ.29 வரையிலும், தூத்துக்குடியில் இருந்து நாராஸ்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்: 06019) அக்.5 முதல் நவ.30 வரையிலும், நாராஸ்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு சிறப்பு ரயில் (எண்: 06020) வரும் அக்.7 முதல் நவ.2 வரையிலும் கால நீட்டிப்பு செய்து இயக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
சிறப்பு ரயில்களின் முன்பதிவு சனிக்கிழமை (செப்.12) காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.