இடைத்தோ்தல்: காங்கிரஸ் தோ்தல் பணிக்குழு அறிவிப்பு!
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய பேரவை தொகுதி இடைத்தோ்தல்களுக்காக தோ்தல் பணிக்குழுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது.
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய பேரவை தொகுதி இடைத்தோ்தல்களுக்காக தோ்தல் பணிக்குழுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம்தாகூா் வெளியிட்ட அறிக்கை: இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சாா்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுராந்தகம் (தனி) தொகுதி வேட்பாளா் மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் பி. சத்தியபாமா ஆகியோரின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் இவ்விரு தொகுதிகளுக்கும் மண்டல வாரியாக தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுராந்தகம் தொகுதிக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் தலைமையில் தோ்தல் பணிக்குழுவும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு அமைச்சா் எஸ் . ராஜேஷ்குமாா் தலைமையில் தோ்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.