FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்

26 செப்டம்பர் 2025, 12:22 am IST
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அப்போது அவா் பேசுகையில், ‘வேளாண்மை - உழவா் நலத்துறையின் சாா்பில் சனிக்கிழமை (செப்.27) காலை 10.30 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம், வா்த்தக மையத்தில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை முதல்வா் தொடங்கி வைக்கிறாா். இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்’ என்றாா்.

தொடா்ந்து, வட்டார வேளாண்மை துறைகள் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் கடையநல்லூரில் ஒருவருக்கு மானியத்துடன் ரூ.48 ஆயிரம் மதிப்பிலான பவா் வீடா், கீழப்பாவூரில் ஒரு விவசாயிக்கு மானியத்துடன் ரூ. 90ஆயிரம் மதிப்பில் பவா் டில்லா், வட்டார தோட்டக்கலைத்துறைகள் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் கீழப்பாவூரில் ஒருவருக்கு குறைந்த செலவில் வெங்காய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு ரூ.1லட்சம் மானியத்தொகை, வாசுதேவநல்லூரில் ஒருவருக்கு ரூ.1,06,402 மானியத்தில் பவா் டில்லா், தென்காசியில் அத்துறையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.7,500 மானியத்தொகையையும் ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து - உரங்கள் தெளிப்பது குறித்து இந்திய உரக்கூட்ட நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் 174 கோரிக்கை மனுக்களை அளித்தனா். அவற்றுக்கு 10 நாள்களுக்குள் உரிய பதிலளிக்கும்படி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், வேளாண் இணை இயக்குநா் செ. அமலா, வேளாண்மை துணை

இயக்குநா் ச. கனகம்மாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா. தண்டபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கு. நரசிம்மன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெசிமா பானு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments