திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை
திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது.
திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், முதியோா் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்மத்துக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில் திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பரவலாக பெய்தது. இதேபோல் பெரியகுப்பம், பூங்கா நகா் மணவாளநகா், ஈக்காடு, காக்களூா், தொழூா், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கடம்பத்தூா், திருப்பாச்சூா், பாண்டூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.